Saturday, 25 December 2021

Saturday, 4 December 2021

 

பெண் கல்வி


அதிகாரம் அறிவினால் கட்டப்படுகிறது. இதனால் இயற்கையாகவே ஆண்-பெண் உறவு முறையில் ஏற்படும் அதிகாரப் போட்டியில் தனது மேலாட்சியைக் கட்டமுயன்ற ஆண் சமூகம் முதலில் பெண்ணுக்கான அறிவு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியது. இதற்காக பல தந்திரங்களைக் கையாண்டுள்ளது. பால்ய விவாகம் கற்புக் கோட்பாடு தாய்மையைக் கொண்டாடுவது குழந்தைபேறு என்று பெண்களுக்கு கற்பிக்கப்பட்ட வாழ்க்கை முறையைத் திணித்தது. இது பெண்களின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக அமைந்தது. அவர்களுக்கு சுமையாக மாறியது.


குறிப்பாக பால்ய விவாகம் அறிவைத் தரும் கல்வியைப் பெறுவதிலிருந்து பெண்ணைப் பெரிதும் விலக்கி வைத்துவிட்டது. வளர்ந்த இளம் பெண்கள் கூட்டம் கூட்டமாகப் புத்தமதத்திலும் சமணசமயத்திலும் சந்நியாசிகளாகச் சேர்வதைத் தடுப்பதாகத்தான் இந்தியச் சமூகத்தில் பால்ய விவாகம் கொண்டுவரப்பட்டது என எழுதுகிறார் பி. குப்புசாமி

இவ்வாறு அறிவு வளர்ச்சிக்கு ஆதாரமாக அமையும் கல்வி பெறுவதை ஆண் சமூகம் தனதாக்கிக் கொண்டது. மேலும் பெண்ணறிவு என்பது பேதமைத்து பெண்ணுக்கு அறியாமையே அழகு என்றும் புனைந்துவிட்டது. பெண்ணை இருகால் முளைத்த ஒரு நடமாடும் கருப்பை என்றே நினைக்க வைத்துவிட்டது.

இத்தகைய இந்தியப் பெண்நிலைமை இந்தியாவை ஆண்ட ஐரோப்பியரின் குறிப்பாக ஆங்கிலேயரின் 'கல்வி கொள்கையினால்' பெரிதும் மாறத் தொடங்கின.

ஆங்கிலேயர் கல்வியை ஜனநாயகப்படுத்தினர். ஜாதி மதம், பால் வர்க்கம், இனம் என்கிற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் கல்வி என அறிவித்தனர். அதுவும் ஒரே மாதிரியான கல்வி என்றனர். இந்த ஒரு கல்விக் கொள்கைதான் இந்தியச் சமூகத்தில் பெரும் மாற்றங்களும் சிந்தனைப் புரட்சிகளும் ஏற்பட வழிகோலிற்று.

வேத காலத்தில் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கினாலும் நாளடைவில் அவர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. இதனால் பெண்கள் தாழ்வான நிலைக்கும் படிப்படியாக தள்ளப்பட்டனர். பல நூற்றாண்டு காலம் வரை இந்நிலை நீடித்தது.

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவ சமய போதகர்கள் மிஷனரிகள் பல்வேறு சீர்த்திருத்த சமூக பணிகளை மேற்கொண்டன. அவர்கள் மேற்கொண்ட பணிகளுள் குறிப்பிடத்தக்க பணியாக அமைந்தது பெண் கல்வி.

பெண்கல்வியின் இன்றியமையாமையை உணர்ந்த இந்திய சமூகச் சீர்த்திருத்தவாதிகளும் அவர்களோடு இணைந்து பாடுபட்டனர். அதன் பயனாக பல கல்விக்கூடங்கள் திறந்துவிடப்பட்டன.

ஆங்கில ஆட்சியில் முக்கிய அங்கமாக விளங்கியவர்கள் குடியேற்ற நிர்வாகிகளும் சமயக் குழுவினர்களுமாவர். ஆயினும் கல்விமுறை எவ்வாறு வளர்ச்சியுற வேண்டும் என்பது பற்றி அவர்களிடத்து ஒருமித்த கருத்து இருக்கவில்லை.

கிறிஸ்தவ சமய போதகர்கள் மாநிலவாரியாகப் பெண்களுக்கான பள்ளிக்கூடங்களை நிறுவத் தொடங்கினர். பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தரங்கைவாசத்தில் பெண்களுக்கான கல்விக்கூடத்தை தொடங்கினார்கள்.

சென்னையில் 1715ல் முதல் ஆங்கிலோ- இந்தியப் பெண்கள் பள்ளியான 'புனித மரியாள் ஷேரிட்டி பள்ளி' தொடங்கப்பட்டது. அப்பள்ளியில் புரட்டஸ்டாண்ட் மதப்பிரிவைச் சார்ந்த ஏழை மாணவ மாணவிகள் சேர்ந்து பயில ஆரம்பித்தனர். அவர்களில் பதினெட்டு பேர் ஆண்கள். பன்னிரண்டு பேர் பெண்கள். 1821 ம் ஆண்டு இப்பள்ளிக் குழுவைச் சார்ந்த பள்ளிகளில் 654 பெண்களும் 4290 ஆண்களும் கல்வி பயின்றார்கள். அவர்கள் யாவரும் கிறித்தவ சமயத்தைச் சேர்ந்தவர்கள்.

திருநெல்வேலியில் ஜேம்ஸ் ஹக் என்பவர் 1816ம் ஆண்டில் பன்னிரண்டு பள்ளிகளை நிறுவினார். அவற்றுள் மூன்று பெண்களுக்காக தொடங்கப்பட்டது. நாசரேத்தில் தொடங்கப்பட்ட பெண்களுக்கான பள்ளியே சென்னை மாகாண அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியாகும்.

1823ம் ஆண்டு நாகர்கோயிலில் தொடங்கப்பட்ட பள்ளியில் 1827ம் ஆண்டு ஐம்பது மாணவிகள் பயின்றனர். 1845 ஆம் ஆண்டு முதன்முதலாக சுதேசியப் பெண்கள் பள்ளி சென்னையில் தொடங்கப்பட்டது. இப்பள்ளியே பின்னர் பெண்கள் பள்ளிகள் பல தொடங்குவதற்கான முன்னோடியாகத் திகழ்ந்தது.

1854 இல் சென்னை மாநிலத்தில் 256 பெண்களுக்கான பள்ளிக்கூடங்களும் 7878 மாணவிகளும் இருந்துள்ளனர். ஆனாலும் இவர்களுக்கு சடங்கான பின்பு கல்வி கற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 1891-92 இல் 3 லட்சம் பள்ளி சிறுமிகளில் 100க்கு இரண்டு பேர் மட்டுமே சடங்கான பின்பும் உயர்நிலைப்பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தக் கல்வியும் எப்படி நல்ல மாணவியாக, நல்ல தாயாக குடும்பத்தை சுத்தமாகப் பேணுபவளாக வாழ்வது என்பதைத்தான் சொல்லிக் கொடுத்தது.

கல்விச் சீர்த்திருத்தங்கள் செய்வதற்கான நோக்கத்தோடு அரசு கல்வி தொடர்பான பல விபரங்களை சேகரிக்கத் தொடங்கின. சென்னை மாகாண ஆளுநராக இருந்த சர். தாமஸ் மன்றோ அவ்வாறு பல தகவல்களை சேகரித்து 1826 ஆம் ஆண்டு ஓர் அறிக்கையை சமர்ப்பித்தார். அதன்படி மொத்த மக்கள் தொகையான 1,34,76,923 பேரில் 1,84,110 ஆண்களும், 4,540 பெண்களும் கல்வி பயின்று வந்தனர்.

அதே காலத்தில் வங்காளத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி அம்மாகாணத்தில் பெண்கல்வி சிறிய அளவில்கூட இடம் பெற்றிருக்கவில்லை என்று தெரிய வருகிறது.

1854ம் ஆண்டு சார்லஸ் வுட் என்பவர் இந்திய கல்விநிலை தொடர்பான அறிக்கை ஒன்றினை அரசுக்கு சமர்ப்பித்தார். அதுவே சார்லஸ் வுட் டெஸ் பாட்ச் என்னும் பெயரில் பிரசித்தம் பெற்றது. இவ்வறிக்கை ஆண் கல்வியைக் காட்டிலும் பெண் கல்வியின் வாயிலாகச் சமுதாயத்தில் வியக்கத்தக்க மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதை அரசுக்கு உணர்த்தியதோடு பெண்கல்விக்குப் போதிய ஊக்கமளிக்கவும் வேண்டியிருந்தது. இவ்வறிக்கையின் அடிப்படையில் மகளிர் பள்ளிக்கூடங்கள் பலவற்றுக்கும் அரசுநிதி உதவியளித்தது. அதன் வாயிலாக பெண்களின் கல்வி மேம்பாட்டுக்கு சிறந்ததொரு அடித்தளம் அமைக்கப்பட்டது. தன்னார்வ குழுக்களும் கிறிஸ்தவ சமயத் தொண்டர்களுக்கும் பல இடங்களில் பெண்களுக்கான கல்விக்கூடங்களை நிறுவிச் சேவை செய்யலாயினர்.

1882 இல் ஹண்டர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தியக் கல்விக்குழு அந்நாளில் கல்வி கற்றுக் கொண்டிருந்த பெண்களின் எண்ணிக்கையில் சென்னை மாகாணமே முதலிடம் வகிப்பதாக குறிப்பிட்டுள்ளது. குழந்தைத் திருமணமே பெண்கள் கல்வி கற்பதற்குத் தடையாக இருப்பதாகவும் சிறுவயதிலேயே படிப்பு நிறுத்தப்படுவதாகவும் அக்கல்விக் குழு தெரிவித்துள்ளது. பெண் ஆசிரியர்கள் இல்லாமையையும் சுட்டிக்காட்டியுள்ளது. பெண்கள் கல்வி மேம்பாட்டிற்காக இக்கல்விக்குழு பின்வரும் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.

1. பெண் கல்விக்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும்.

2. பெண்கள் பள்ளிகள் மற்றும் அநாதை விடுதிகள் ஆகிய நிறுவனங்கள் கல்வியறிவைஅளிக்கும் போது அந்நிறுவனங்களுக்கு சமய வேறுபாடின்றி உதவித் தொகையை அரசு வழங்க வேண்டும்.

3. ஆண்கள் பயிலும் பள்ளிகளைவிட பெண்கள் பயிலும் பள்ளிகளுக்கு நிதிஉதவி விதிமுறைகள் தளர்த்தப்பட வேண்டும்.

4. தொடக்கப்பள்ளி நிலையிலும் ஆண்களின் கல்விமுறைப் பாடத்திட்டத்தைக் காட்டிலும் பெண்களின் கல்விமுறைப் பாடத்திட்டம் எளிமையாகவும் நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்புடையதாகவும் வேலைவாய்ப்பு அளிப்பதற்குரியதாகவும் இருத்தல் வேண்டும்.

5. கல்விக்காகக் கொடுக்கப்படும் உதவித் தொகையை தேர்வுக்குப்பின் கொடுப்பதன் மூலமாக பெண்கள் மேலும் கல்வியைத் தொடர வாய்ப்பாக அமையும். தவிர பன்னிரண்டு வயதிற்கு மேற்பட்ட பெண்களின் கல்விக்காக தனிநிதி ஒதுக்க வேண்டும்.

6. பெண்கள் பள்ளிகள் தகுந்த இடங்களில் நிறுவப்பட வேண்டும். தாய்மொழி மற்றும் ஆங்கிலம் வாயிலாக கல்வி புகட்டப்பட வேண்டும். விடுதிகளோடு தொடங்கப்படும் பெண்கள் பள்ளிகளுக்கு சிறப்பான முறையில் நிதியுதவி அளிக்கவேண்டும்.

7. இந்தியக் கலாச்சாரச் சூழலில் ஆண்-பெண் இணைந்து கல்வி கற்கும் நிலை சமுதாயத்திற்கு ஏற்புடையதாகாது என்பதால் பால்வாடிகள் தவிர ஏனைய கல்விக்கூடங்களில் கூட்டுக்கல்வி முறைக்கு ஆதரவு மறுக்கப்படுதல் வேண்டும். ஆனால் பெண்கள் பள்ளிகள் அமைக்க முடியாத −டங்களில் மட்டும் கூட்டுக்கல்வி முறை தொடரலாம்.

8. அனைத்து பெண்கள் பள்ளிகளிலும் படிப்படியாக ஆண் ஆசிரியர்களுக்குப் பதிலாக பெண் ஆசிரியர்களையே நியமிக்கப்பட வேண்டும்.

ஹாண்டர் குழு ஆண் பெண் இரு பாலார்க்கும் தனித்தனியே பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தது. உயர்சாதிப் பெண்கள் பருவமடைந்த பின்னர் வீட்டுக்கு வெளியே செல்ல அனுமதிக்கப்படாமையால் அவர்களின் வசதிக்காக வீட்டுக் கல்வி என்று சொல்லப்படும் சனனா (Zenana) முறையையும் பரிந்துரைத்துள்ளது.

1881 ஆம் ஆண்டில் சென்னை மாகாண மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்தப் பெண்களான 1,57,49,588 பேரில் 39,104 பெண்கள் படித்துக் கொண்டிருந்ததாகவும் 94,571 பெண்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களென்றும் அறியமுடிகிறது.

இந்தியா முழுமையும் ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் 2,13,428 பெண்கள் மட்டுமே படித்துக் கொண்டிருந்தார்களென்றும் தெரிய வந்தன. இந்த எண்ணிக்கை மிகக் குறைவானதாக இருந்த போதிலும் 1878 ஆம் ஆண்டில் படித்துக் கொண்டிருந்த 78,678 பெண்களோடு ஒப்பிட்டு நோக்குகையில் வியத்தகு முன்னேற்றம் என்றே கூறலாம்.

டாக்டர் குக்கான் என்பவர் 1889-90 ஆம் ஆண்டின் கல்வி அறிக்கையில் பெண்களின் ஒட்டுமொத்தக் கல்வியின்மை நிலையைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு சமுதாயம் படித்த ஆண்களையும் படிக்காத பெண்களையும் கொண்டிருந்தால் முன்னேற்றம் அடைவதென்பது இயலாத காரியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசு தனியார் பள்ளிகள் நிறுவிட நிதியுதவியளித்திட முடிவெடுத்ததும் சுதேசியவாதிகளும் தேசபக்தர்களும் சமூகச் சீர்திருத்தவாதிகளும் பெண்களுக்கான கல்விக்கூடங்களை நிறுவ முன்வந்தனர்.

இதன்பின்னரே பெண்களுக்கான பள்ளிகள் கல்லூரிகள் தோன்றி பெண் கல்வி வளர்ச்சி அடைவதற்கான முன் முயற்சிகளில் ஈடுபட்டன. ஆனாலும் இந்தியாவின் கல்விமுறை பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்க சமூகப் போக்கை வலியுறுத்திப் போவதாகவே இருந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கல்விக்காக அமைக்கப்பட்ட குழுக்கள் பலவும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளன.

 தமிழ் மொழியின் சிறப்பு


தமிழை அமுதமாக பல்வேறு புலவர்கள், கவிஞர்கள் கூறினாலும் ஆங்கிலம் என்பது நம்முடைய சந்திப்பு மொழியாகிவிட்டது. இதில் நாம் குறைக் கூற தேவையில்லை. ஆனால் இறைக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக அக்கால சித்தர்கள் முதல் இக்கால ஆன்மீக வாதிகளும் கருதுகின்றனர். அதைப்பற்றிய ஒரு ஓப்பீடு.

முத்தி தருபவன் அவனே ; ஞானம் தருபவன்அவனே ;ஞானமாய் விளங்குபவனும் அவனே ; பாலில் கலந்துள்ள நெய்போல் காணும் பொருளிலெல்லாம் கரந்துள்ளான்"

எனத் திருமூலர் இறைவனைப் போற்றும் போது " முத்தமிழாகவும் விளங்குகிறான் " எனக் குறிக்கின்றார். எல்லாமாய் விளங்கும் இறைவன் தமிழாகவும் விளங்குகின்றான். எல்லாவற்றிலும் சுரந்துள்ளவன், தமிழுள்ளும் கரந்துள்ளான். முக்தியும், ஞானமும் விழுமியன. அவற்றோடு தமிழையும் வைத்துப் போற்றுகின்றார்.

"முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதியது விரும்பாரன்றே "- திருமந்திரம்.

வேறு ஒரு பாடலில் திருமந்திரப் பாடலில் சாத்திரத்தை தமிழில் படைக்கும் அருளைக் கூட்டிப் பாடச் செய்த பெருங் கருணையைப் பாடி பரவுகிறார்.

:"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்

தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..."

இவ்வரிகளில் தமிழில் பாடும் அருள் கிட்டியதன் பெருமை தொக்கி நிற்பதைக் காணலாம்.

" அருமலர் மொழியுஞான அமுர்த செந்தமிழைச் சொல்வாம் "
ஞானவெட்டியான்

"பண்டுடன் பழகி பைந் தமிழுணர்ந்து தெண்ரை மீதிற் றெளிந்தவர் சித்தரே "

" சிந்தையுறு ஞானந் தெளியவுரை பாடுதற்கு
வந்தபஞ்ச பூதத்தின் வாழ்க்கையே- செந்தமிழ் நூல்
காவியந்தானாயிரத்தில் கல்லா யரு நூலும்
தேவியென்னும் பூரணியே சீர்

-அகஸ்தியர் ஞானம் 100

பொதிகை மேவு மகத்தீர ராலெனது
போத இத்தமிழ் வாக்கியம் - ஞான வெட்டியான் 1500

கருத்து விளக்கத்திற்காகப் பயன் படுத்தப்படும் உவமை இலக்கிய சுவைக்கு மெருகூட்டுவது கும். சித்தர் பாடல்களில் கணக்கற்ற உவமைகள் காணப்படுகின்றன.

வள்ளலார் தமிழை பித்ரு மொழியாக கருதுகிறார். இறைவன் தன்னை தமிழால் வளர்க்கின்றார் என்பதை “மெய்யடியார் சபை நடுவே எந்தை உனைப்பாடி மகிழ்ந்தின்புறவே வைத்தருளிச் செந்தமிழின் வளர்க்கின்றாய் ( 4802)மேலும்,

வடிக்குறும் தமிழ்க்கொண்டு அன்பருக்கு அருளும் வள்ளலே- 875 என இறைவனை ப்போற்றி துதிக்கின்றார்.

சாகாகலை தந்தது- தமிழ் மொழி

ஆரவாரமில்லா மொழி- தமிழ் மொழி

தமிழ் உச்சரிப்பு சாகாகலைக்கு முக்கிய பங்காகும் என வள்ளலார் கூறுகின்றார்.

வள்ளல் பெருமானை ப்பற்றி ராமலிங்கரும் தமிழும் – என திரு ஊரன் அடிகள் தனி புத்தகம் வெளியிட்டுள்ளார்கள். எனவே வள்ளலார் தமிழ் மொழிமேல் எவ்வளவு பற்று வைத்திருந்தார் என்பதை யூகித்துக்கொள்ளவும்.

அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இருக்கும். அதை எதிராளியின் காதின் மீது வைத்துக்கொண்டு கேள்விகளைக் கேட்பார். பாடல்களைச் சொல்லச் சொல்வார். ஏதும் வழு இருந்தால் உடனடியாக எட்டினமட்டும் காதை அறுத்துவிடுவார்.

அருணகிரியோ ஒரு புது கண்டிஷனைப் போட்டுவிட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். அருணகிரி ஓர் அந்தாதியைப் பாடுவார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்வில்லி அர்த்தம் சொல்லிவிட்டால் போதும். அவ்வாறு சொல்லிவிட்டால் வில்லிப்புத்தூரார் வென்றவர் ஆவார். வென்றவர் எட்டினமட்டும் தோற்றவர் காதை அறுத்துவிடலாம். அப்படி வில்லி பொருள் சொல்லவில்லையென்றால் வில்லியின் காதை அருணகிரி அறுக்கலாம். வில்லியும் ஒத்துக்கொண்டார்.

வாதத்தை வளர்த்துச் செல்லவிரும்பாத அருணகிரி, ஒரு பாடலைத் தாமே சொல்லி, அதன் பொருளைக் கேட்டார். வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய் அமர்ந்துவிட்டார். ஏனெனில் அந்தப் பாடல் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை.

அது ஒரு "தகரவர்க்க"ப் பாடல். முற்றிலும் "த" என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் இவ்வகைப்பாடல்கள் உண்டு. "ஏகாக்ஷரப் பாடல்" என்று சொல்வார்கள். தமிழில் ககரவர்க்கம், தகரவர்க்கம் ஆகியவற்றில் பாடல்கள் உண்டு. காளமேகப்புலவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடியிருக்கின்றனர். வில்லிப்புத்தூரார் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, தம் காதை அறுத்துக்கொள்ளுமாறு அருணகிரியிடம் கேட்டுக்கொண்டார். அருணகிரியோ அது தம்முடைய நோக்கமல்ல என்றும் புலவர்களை இவ்வாறு அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை நிறுத்தச் செய்யவேண்டும் என்பதே விருப்பம் என்றும் சொல்லிவிட்டார். வில்லிப்புத்தூரார் அருணகிரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தாம் இனி தமிழை வளர்க்கப் பாடுபடப் போவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்னாட்களில் அவர் தமிழில் மகாபாரதத்தைப் பாடினார். அந்த நூல் அவருடைய பெயராலேயே 'வில்லி பாரதம்' என்று வழங்குகிறது.
பாடலைப் பார்ப்போம்:

"திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா

திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா

திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து

திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே"

இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார்.

திதத்தத் தத்தித்த - "திதத்தத் தத்தித்த" என்னும் தாளமானங்களை,

திதி - திருநடனத்தால் காக்கின்ற

தாதை - பரமசிவனும்

தாத - பிரமனும்

துத்தி - படப்பொறியினையுடைய

தத்தி - பாம்பினுடைய

தா - இடத்தையும்

தித - நிலைபெற்று

தத்து - ததும்புகின்ற

அத்தி - சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு

ததி - தயிரானது

தித்தித்ததே - தித்திக்கின்றதென்று

து - உண்ட கண்ணனும்

துதித்து - துதி செய்து வணங்குகின்ற

இதத்து - பேரின்ப சொரூபியான

ஆதி - முதல்வனே!

தத்தத்து - தந்தத்தையுடைய

அத்தி - அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட

தத்தை - கிளி போன்ற தெய்வயானைக்கு

தாத - தொண்டனே!

தீதே - தீமையே

துதை - நெருங்கிய

தாது - சப்த தாதுக்களால் நிறைந்ததும்

அதத்து - மரணத்தோடும்

உதி - ஜனனத்தோடும்

தத்தும் - பல தத்துக்களோடும்

அத்து - இசைவுற்றதுமான

அத்தி - எலும்புகளை மூடிய

தித்தி - பையாகிய இவ்வுடல்

தீ - அக்கினியினால்

தீ - தகிக்கப்படுகின்ற

திதி - அந்நாளிலே

துதி - உன்னைத் துதிக்கும்

தீ - புத்தி

தொத்தது - உனக்கே அடிமையாகவேண்டும்

இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் "திதத்தத்தத்" என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை "மடக்கு" அல்லது "யமகம்" என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை "அந்தாதி" என்று சொல்வார்கள். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் - தெரிந்துகொள்ளவேண்டியவை இருக்கின்றன. உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.

Wednesday, 1 December 2021

புன்னகை

jddjhjdjhfhjdsbhbdhbhjdbjhdbjhbdjhdbhdbhjdbhdbjhdbhjsdbjhdbhjdbhjdbhjdbhsdbsbhjdbhjsdbhjdbhjdbkjsadkhhdnbkhb dkhuihbb jhdfnjdhjdhjhdhbjsjsjjjjsjsnsbbvcxgs shbsgaiamk,qwpwkmnmnbnbsjnakasajkdlkdfj;lkjjksidjpoe,



  வாழ்க்கை வாழ்வதற்கே